என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

(என் உயிர் நீதானே.....)

பூங்கொடி தள்ளாட
பூவிழி வந்தாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே

அவ சந்திக் மச்சாங்
புங்காராயா
ஜானாலுபா
சாமா சாயா

(பூங்கொடி தள்ளாட.....)

நீ தந்த சொந்தம் மாறாதே
நான் கண்ட இன்பம் தீராதே
உன்னருகில் உன் இதழில்
உன் மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்

(என் உயிர் நீதானே.....)

பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல்
பாடிட வந்தேனே

ஹத்தி ஹித்த டுவா டுவா
ஓராங் சகல டுவா டுவா

நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகில் புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனே
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்

(என் உயிர் நீதானே.....)


0 கருத்துகள்

கருத்துரையிடுக

நேயர் விருப்பப் பாடல்களையும் பின்னூட்டங்களில் தரலாம்.